![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWhi5Zp3jylkKVgcWEQaBdjY-l0LeNJ68hl4mYeBMkAYK-v7LcDL74nn2Rc_X_Dh4DwTU3yUCvdgqdCjmzGr3l8JjQyjlbiXjvTOv7WF_pRJp2Xy5iOXDArAdJYe7OzD6YZ0TQ/s320/honey.jpg)
தேனில், 78 பங்கு கரி நீரைகளும் (Carbo Hydrates), 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன் தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.
பூவிலுள்ள மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்கள் போன்றவை அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அது சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.
தேன் இருதய வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன், இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது. காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவை செரிக்கும் நல்ல மருந்து தேன்.
இறைச்சி உண்ணுவதை விட தேனை குடித்தால், அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகும். திருமணமான தம்பதிகள் இரவில், பால் பருகும்போது ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால், சுக்கில கட்டும் ஆற்றலும் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகி அல்லல்
படுபவர்கள், இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு சிறு துண்டுகளாக வெட்டி, தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊற வைத்து, அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.
குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள். கடும் வயிற்று வலிக்கு, ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனை விட்டு, நன்றாக கலக்கி பருகி விட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.
எது நல்ல தேன்? சுத்தமான தேன் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது, நல்ல தேன் என்று தெரிந்து கொள்ளலாம். தேனின் மணமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ, அப்பூக்களை சார்ந்தே இருக்கும்.
வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன், சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன், பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை, சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும்.
தேனை எதனுடன் சேர்த்தல் என்ன பலன் கிடைக்கும்?
- பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட வரும், இதயம் பலம் பெரும்.
- பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
- மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரதம் உண்டாகும்.
- எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
- ஆரஞ்சுப்பழதுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
- தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாபிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.
- இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
- கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
- தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
Comments